Wednesday, April 8, 2009


சின்னச் சின்ன பூனைக்குட்டி
சிங்காரப் பூனைக்குட்டி
விழித்துப்பார்க்கும் பூனைக்குட்டி
வெள்ளை நிறப்பூனைக்குட்டி

திருட்டுப்பார்வை பார்க்குதாம்
துள்ளி ஓட முயலுதாம்

Monday, April 6, 2009

அபிரகாம் லிங்கன் (1809 - 1865)

அபிரகாம் லிங்கன் (1809 - 1865)


அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் அந்த நாட்டில் அல்லது வேறெந்த நாட்டிலும் - தோன்றிய மிக்க புகழ் வாய்ந்த - மிகப்பெரும் போற்றுதலைப் பெற்ற - அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். அப்படியானால் எனது பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை? கொடிய அடிமை முறையை ஒழித்து 35,00,000 அடிமைகளுக்கு விடுதலை அளித்தது ஒரு மாபெரும் சாதனை இல்லையா?

மாபெரும் சாதனைதான். ஆனால், பின்னுற நோக்கும் போது, உலகெங்கும் அடிமை முறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்டு வந்த சக்திகள், எதிர்த்து வெல்ல முடியாத அளவுக்கு பெருவலிமை வாய்ந்தனவாக இருந்தன என்பதைக் காண்கிறோம். லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பே பல நாடுகள் அடிமை முறையை ஒழித்துவிட்டன. லிங்கன் இறந்த பிறகு 65 ஆண்டுகளுக்குள்ளேயே பெரும்பாலான மற்ற நாடுகளும் அடிமை முறையை ஒழித்துவிட்டன. எனவே அதிகமாகப் போனால் ஒரு நாட்டில் அடிமை முறையை ஒழிப்பதை விரைவுபடுத்தினார் என்ற ஒரே பெருமையை மட்டுமே லிங்கனுக்கு அளிக்க முடியும்.

ஆயினும் தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல முயன்றதற்கு இடங்கொடாமல் அமெரிக்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றதை லிங்கனின் தலையாய சாதனையாகக் கூறலாம். அந்த ஒரு காரணத்திற்காகவே, இவர் இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்குத் தகுதியுடையவர் எனலாம்.

ஆனால், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான், தென் மாநிலங்கள் பிரிந்து சொல்ல விரும்பியதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன், லிங்கன் இல்லாமல் வேறொருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், உள்நாட்டுப் போரில் வடக்கு மாநிலங்கள் தோல்வி கண்டிருக்கும் என்றும் உறுதியாக கூறுவதற்கில்லை. மேலும், வடக்கு மாநிலங்கள் மக்கள்தொகை அதிகமாக கொண்டிருந்தன. அதோடு, தென் மாநிலங்களைவிட வடக்கு மாநிலங்கள் தொழில் உற்பத்தி மிகப் பெருமளவுக்கு இருந்து வந்தது. இந்த இரு சாதகங்களையும் வைத்துக்கொண்டே வடக்கு மாநிலங்கள் உள்நாட்டுப் போரைத் தொடங்கின.

உள்நாட்டுப் போரை வடக்கு மாநிலங்கள் வெற்றிகரமாக நடத்தியிராவிட்டாலுங்கூட, வரலாற்றின் போக்கில் பெரும் மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்காது. மொழி, சமயம், பண்பாடு, வாணிகம் ஆகிய தளைகளினால் வடக்கும் தெற்கும் மிக வலுவாகப் பிணைக்கப்பட்டிருந்தன. தெற்கு பிரிந்து சென்றிருந்தாலும் விரைவிலேயே வடக்கும் தெற்கும் மீண்டும் இணைந்திருக்கும். அவற்றுக்கிடையிலான பிரிவினை, இருபது ஆண்டுகளுக்கு ஏன், ஐம்பது ஆண்டுகளுக்குக்கூட நீடித்திருந்தாலும், அது உலக வரலாற்றில் ஓர் அற்ப நிகழ்ச்சியாகவே இருந்திருக்கும். ( தென் மாநிலங்கள் நிரந்தரமாகப் பிரிந்து சென்றிருந்தாலும்கூட, அமெரிக்கா இன்று உலகில் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நான்காவது நாடாகவும், முதன்மையான தொழில் வல்லரசாகவும் விளங்கியிருக்க முடியும் என்பதையும் இங்கு மறந்துவிடலாகாது)

அப்படியானால் லிங்கனை முக்கியத்துவமில்லாத ஒரு மனிதராகக் கருதுவதா? அவருடைய வாழ்க்கைப் பணி, ஒரு தலைமுறைக் காலம் பல கோடி மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வாக்கினைப் பெற்றிருந்தது. ஆயினும் அந்தச் செல்வாக்கு பல நூற்றாண்டுக் காலம் நீடித்த செல்வாக்கைக் கொண்டிருக்கிற மகாவீரரைப் போன்று அவரை அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவராக ஆக்கிவிடவில்லை.

Friday, September 19, 2008

கல்வி

கல்வியின் சிறப்பு.
-------------
கல்வி என்பது மனிதனின் வாழ்வில் முக்கியமானது.
கல்வியின் பயன் கற்ற பின்புதான் தெரியும் அதன் சிறப்பும் மக்கள் நம்மீது காட்டும் மரியாதையும் நாம் மற்றவர்களை போற்றி வணங்கவும் நாமும் பண்பாக நடக்கவும் உதவுகின்றது.

கல்வி ஒரு வழி காட்டி. அறிவூட்டி ஒளி கொடுத்து அறியாமைய போக்கி நல் வழி காட்ட வல்லமை கொண்டது.

மனிதர்காளாக பிறந்தவர்கள் கற்கவேண்டியவற்றை கற்று கற்ற படி நண்றாக வாழ்வதே சிறந்தவையாகும்.
கல்வி கற்றுக்கொள்ளாதவன் கண் இருந்தும் கண் அற்றவன் போலாவான்.

உலகில் மிகச்சிறந்த செல்வம் கல்வி கல்வி கற்றால் தான் செல்வம் பெருகும் இல்லத்தில்.
பணத்தால் நாம் எதையும் வாங்கி அழகுபார்க்கலாம்.வாங்கும் பொருள்கள் அழிந்துவிடக்கூடியது.

இத்தனைக்கும் சிறப்பாக அமைவது எதனாலும் அழித்துக்கொள்ள முடியாதது நம்மோடு கூட வருவது நாம் கற்ற கல்வி ஒன்றுதான்.

கல்வி அழியாது நிலையானது நாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு கொடுத்து வளம் பெறச்செய்து கொள்ள முடியும்
கற்றவருக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு உண்டாகும் கல்வியின் அழகே ஒருவருக்கு பெரும் அழகு. அந்த கல்வி அழகை பெற நாம் முயற்சித்து நண்றாக படிக்க வேண்டும் சிறுவர்களே விளையாட்டில் கவனம் எடுப்பது போல் கல்வியில் முக்கியமாக கவனம் எடுத்து படித்து பெரியவர்களாகவும் நாடுபோற்றும்படி வாழ்க.

அன்புடன்
கொக்குவில் ராகினி. (ஜெர்மனி.)


Sunday, August 10, 2008

தைப்பொங்கள்


தைப்பொங்கள்
--------------
தமிழர் திருநாள் தைப்பொங்கள் எனப்படும்.
இதை உழவர் திருநாள் என்றும் சொல்லப்படும்.
இத்திருநாள் தைமாதம் முதல் நாள் வரும் தினத்தில் கொண்டாடப்படும்.
இத் திருநாள் உழவர்கள் தமது வயலில் விளைந்த புது நெல் அரிசி எடுத்து பொங்கி மகிழ்வார்கள்.
இத்திருநாளளில் முதல் நாள் நன்றாக வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் மெழுகி அதில் அழகிய கோலம் போட்டு சாணதால் பிள்ளையார் பிடித்து அதில் அறுகம் புல் வைத்து அதற்கு வீபூதி சந்தனம் குங்குமம் வைத்து மெழுகிய இடத்தில் வைப்பார்கள்.
இதை பிள்ளையார் என்று சொல்வது.

பூரண கும்பம் வைத்து விளக்கு ஏற்றி வாழை இலையில் பழம் பாக்கு வெற்றிலை எடுத்துவைப்பார்கள்.
புதிய பானைக்கு வீபூதி சந்தனம் குங்குமம் வைத்து அதன் கழுத்துப்பாகத்தில் இஞ்சி இலை சுற்றிக் கட்டி நிறைவான சுத்தமான தண்ணீருடன் பசுப்பால் கலந்து அடுப்பில் வைப்பார்கள்அந்த தண்ணீர் கொதித்து பால் திரைந்து அழகாக மேலே திரை கட்டி வரும்போது எல்லாரும் பொங்லோ பொங்கள் என இறைணை வணங்குவார்கள்.
சிறுவர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்வார்கள்.
வணங்கிய படி புதிய அரிசி எடுத்து சுத்தமாக கழுவி அதில் சிறிதளவு பயறும் சேர்த்து அந்த பானையில் போடுவார்கள்.இதனுடன் முந்திரிகைவற்றல் கயூ சக்கரை போட்டுக்கொள் வார்கள்.பொங்கள் பதமாக வந்தததும் இறக்கி வாழை இலையில் சூரியனுக்கு படைத்து வழி படுவார்கள் பொங்கிய பொங்களை சுற்றத்தாருக்கும் கொடுத்து தாமும் உண்டு மகிழ்வார்கள்.
அன்புடன்
பா.ராகினி

Wednesday, August 6, 2008

நானும் பறவையாக இருந்தால்.


நானும் பறவையாக இருந்தால்
.----------------
எனக்கு வாயது இரண்டு
எனது வீட்டு பூந்தோட்டத்தில் வண்ண வண்ணப்பூக்கள் பூத்து இருந்தது என்ன அம்மா காலை எழுந்து எனக்கு குளிப்பாட்டி பட்டுச்சட்டை போட்டு அழகாக தலை வாரி பொட்டும் வைத்துவிடுவாள். நான் என்னை எங்கள் கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பேன் அதன் முன் நின்று வட்டமிடுவேன்.
வட்ட மிட்டபடி எங்கள் வீட்டுத்தோட்டத்தை பார்த்தேன் பட்டாம்பூச்சிகள் பூவில் தேன் அருந்துவதை கண்டு ஆனந்தம் அடைந்தேன்.


வட்ட மிட்டபடி எங்கள் வீட்டுத்தோட்டத்தை பார்த்தேன் பட்டாம்பூச்சிகள் பூவில் தேன் அருந்துவதை கண்டு ஆனந்தம் அடைந்தேன் அதன் சிறககளில் வண்ணங்களை கண்டு வியந்தேன் இத்தணை அழகா இந்தப் பட்டாம் பூச்சி. என்று என் கன்னத்தில் கைவைத்தவாறு அதன் அழகை கண்டு கண்டுபொருமையும் மகிழ்வும் கொண்டேன்.

அது தேனை அருந்தி விட்டு பறந்து சென்றபார்த்தேன் உயரத்தில் சிட்டுக்குருவிகள் பறந்து கொண்டு இருந்தன என் மனது கற்பனையில் மிதந்தன எனக்கும் சிறகு இருந்தால் நானும் அதனோடு சென்று விளையாடி இருப்பேன் என. மனது ஏக்கமா இருந்தது.

நானும் சிட்டுக்குருவி போல் இருந்தால் அவர்களோடு எல்லா இடமும் பறந்திருப்பேன் ஒவ்வொரு பூங்காவணத்தையும் சுற்றி பார்த்திருப்பேன் நான் தொட்டுவிட முடியாத வானத்தை அருகில் நின்று பார்த்திருப்பேன் என நினைத்துக்கொள்ள காதில் இனிமையான ஓசை விழுந்தன கூக்கு..கூக்கு அங்கும் இங்கும் பார்த்தால் மரத்தில் குயில் பாடிக்கொண்டு இருந்தது ஓ:.நீதானா அதிகாலை பாடி எழுப்புவது குயிலே எனக்கு உந்தன் சிறகைத்தருவாயா..? உன்னைப்போல் எனக்கும் பறந்து திரிய ஆசைப்படுகின்றேன் பட்டாம் பூச்சியும் என்னை அழைக்கவில்லை சிட்டுக்குருவியும் என்னை அழைத்துச்செல்லவில்லை நீயாவது என்னை அழைத்துச்செல்வாயா நானும் உன்னைப்போல் அதிகாலையில் பாடி எல்லோரையும் துயில் ஏழுப்புவேன். இயற்க்கை காட்சிகளை கண்டுமகிழ்வேன்.

என்னையும் உன்னோடு அழைத்துச்செல் என்றவாறு அழுதேன் குயிலும் என்னை அழைத்துச்செல்லவில்லை
கவலையுடன் வீட்டுக்குள் நுழைந்து கண்ணாடி முன் நின்று அழுதேன்.எனக்கும் சிறகு இருந்திருக்க கூடாதா..? என்று.

அன்புடன்
ராகினி.
---------------
நானும் குருவியா பிறந்திருக்ககூடாத என்னை யாரும் துண்புறச்செய்திருக்கமாட்டார்கள்

வானொலி


வானொலி

-----

இன்று வானொலி இன்றியமையாயத ஒன்றாகிப்போனது ஒவ்வோரு உள்ளங்களுக்கும் அறுதல் அளித்துக்கொண்டு இருக்கின்றது. வானொலி இல்லாத வீடு உண்டா ? என்பது ஒரு கேள்விக்குறிதான்.


எல்லா வீடுகளில் இசையை வாரி வளங்கி கொண்டு இருக்கிறது.

அறிவு வளர்ச்சிக்கும் பொழுது போற்கிக்கும் பெரிதும் உதவியா உள்ளது வானொலியை கண்டு பிடித்தவார். மார்க்கோனி எனும் விஞ்ஞானியாவர்.


இதனால் பல நாட்டு நிலைமைகளை செய்திகள் என்ற தலைப்பில் கேட்டு அறிந்து கொள்ள முடியும்சிறுகதைகள் நாடகம் கவிதைகள் இசைகள் என கேட்டு மகிழ்வடையலாம்.உவ்வொரு நாட்டு மொழகளிலும் உவ்வொரு விதமாக இந்த வானொலி உலாவருகின்றது.


இதில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அதிகமா சிறுவர்கள் உள்வாங்கி பயன் அடைவது அவசியம் பொது அறிவு கொண்ட நிகழ்ச்சிகள் வழங்கப்படும் போது நமக்கு தெரியாத விடயங்களை கற்றுக்கொள்வது அவசியம்.
வாnனொலி சிறுவர் முதல் வயோதிபர் வரை கேட்டு மகிழ்வடைகின்றனர்.உவ்வொரு நாட்டிலும் வானொலி முக்கியமாக இருக்கின்றது


rahini
என்னை வானொலியும் இசையும் தான் வாழவைத்துக்கொண்டு இருக்கின்றன.

Tuesday, August 5, 2008

மலர்கள்.


மலர்கள்.
----
இப்போ பார்க்கும் இடங்கள் எங்கும் அழகான மலர்கள் பூத்துக்குழுங்குகின்றன. பார்ப்பதற்கு கண்கள் ஆனந்தம் அடைகின்றன. மனதுக்கு மகிழ்ச்சியும் தருகின்றன. மலர்களை கண்டு வண்டு முதல் மானிடன் வரை மயங்காதவர்கள் உண்டா..? இயற்கையை ரசிக்கும் ஒவ்வோரு உள்ளமும் மலர்களின் அழகையும் அதன் நறுமணத்தையும் சுவாசித்து மகிழ்ந்து விடுவார்கள்.

ஒவ்வொரு வடிவங்களில் மலர்கள் இருக்கின்றன. மலர்கள் இயற்கையை தரும் பொரும் செல்வமாகும்.
பல பல வடிவங்களில் பல பல நிறங்களில் காணக்கூடியதாக உள்ளன. மக்களின் மனதை வருடி தன் வசம் இழுத்துக்கொள்ளும் வாசணை மலர்களும் உண்டு உதாரனமாக மல்லிகைப்பூ இதன் வாசனை யால் மயங்காதவர்கள் இல்லை.

மலர்களின் பெயர்கள் நிறைய உண்டு
மல்லிகை றேரஜா. முல்லை தாமரை செவ்வந்தி சூரிய காந்தி என நிறைய பெயர்கள் உள்ளன.தேனீக்கள் கூட அதில் தேனை உண்டு மகிழ்வாக வாழ்கின்றன.

மலர்கள் இறைவனின் பூசைக்கு பயன் படுத்த படுகின்றது. பெண்களின் கூந்தலைக்கூட அலங்கரிக்க உதவுகின்றன. ஒவ்வோரு மங்களமான நிகழ்ச்சிகளுக்கும் துயரத்தின் நிகழ்சிக்கும் உதவுகின்றன.இதில் வாசனை திரவியம் கூட தயரித்து பயன் அடைகின்றனர் ஒவ்வொரு மரமும் மலர்கள் வந்தால் தான் காயை கொடுக்கின்றது.
முதல் பூவாகி காயாகி கனியாகுவதே இயற்கையாகும் இதன் முலம் பூவின் பெருமை எந்த மரத்திற்கும் பொருமை உண்டு விட்டை கூட அழகாகவும் வாசனையுடனும் வைத்திருக்கும் பெருமை இந்த மலர்களுக்கு உண்டு
மலர்களை நேசித்து நம் வீட்டிலும் நடுவோம்.