Sunday, August 10, 2008

தைப்பொங்கள்


தைப்பொங்கள்
--------------
தமிழர் திருநாள் தைப்பொங்கள் எனப்படும்.
இதை உழவர் திருநாள் என்றும் சொல்லப்படும்.
இத்திருநாள் தைமாதம் முதல் நாள் வரும் தினத்தில் கொண்டாடப்படும்.
இத் திருநாள் உழவர்கள் தமது வயலில் விளைந்த புது நெல் அரிசி எடுத்து பொங்கி மகிழ்வார்கள்.
இத்திருநாளளில் முதல் நாள் நன்றாக வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் மெழுகி அதில் அழகிய கோலம் போட்டு சாணதால் பிள்ளையார் பிடித்து அதில் அறுகம் புல் வைத்து அதற்கு வீபூதி சந்தனம் குங்குமம் வைத்து மெழுகிய இடத்தில் வைப்பார்கள்.
இதை பிள்ளையார் என்று சொல்வது.

பூரண கும்பம் வைத்து விளக்கு ஏற்றி வாழை இலையில் பழம் பாக்கு வெற்றிலை எடுத்துவைப்பார்கள்.
புதிய பானைக்கு வீபூதி சந்தனம் குங்குமம் வைத்து அதன் கழுத்துப்பாகத்தில் இஞ்சி இலை சுற்றிக் கட்டி நிறைவான சுத்தமான தண்ணீருடன் பசுப்பால் கலந்து அடுப்பில் வைப்பார்கள்அந்த தண்ணீர் கொதித்து பால் திரைந்து அழகாக மேலே திரை கட்டி வரும்போது எல்லாரும் பொங்லோ பொங்கள் என இறைணை வணங்குவார்கள்.
சிறுவர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்வார்கள்.
வணங்கிய படி புதிய அரிசி எடுத்து சுத்தமாக கழுவி அதில் சிறிதளவு பயறும் சேர்த்து அந்த பானையில் போடுவார்கள்.இதனுடன் முந்திரிகைவற்றல் கயூ சக்கரை போட்டுக்கொள் வார்கள்.பொங்கள் பதமாக வந்தததும் இறக்கி வாழை இலையில் சூரியனுக்கு படைத்து வழி படுவார்கள் பொங்கிய பொங்களை சுற்றத்தாருக்கும் கொடுத்து தாமும் உண்டு மகிழ்வார்கள்.
அன்புடன்
பா.ராகினி

No comments: